நான் நித்யவனத்திற்கு செல்லும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து சுலபமாக சமையல் செய்வதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். தோசை மாவு இருந்தால் போதும் எப்படியும் என் கணவர் சமாளித்து விடுவார் என்று எண்ணினேன். ஆனால் தொட்டுக் கொள்வதற்கு உண்டான பொடியை செய்ய வேண்டும். கொள்ளுப்பொடி , இட்லி பொடி , கருவேப்பிலை பொடி என மூன்று வகை பொடிகளை செய்து விட்டேன் . புதினாவும் , கொத்துமல்லி தழையையும் சேர்த்து ஊறுகாய் செய்தேன். தக்காளி தொக்கு செய்து வைத்தேன். இவற்றையெல்லாம் வைத்து மதியத்திற்கு சாதம் வடித்து சாப்பிட்டு விடுவார். பாசிப்பயிறை ஊற வைத்து முளைகட்டியவுடன் கிளாஸ் கண்டெய்னரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட்டேன். கேரட்களை தோள்சீவி நீளமாக நறுக்கி அதையும் பிரிட்ஜில் வைத்தேன். ஒரு லிட்டர் பாலை காய்ச்சி தயிர் செய்து அதையும் பிரிட்ஜில் வைத்தேன். இது போதும் என்று பெருமூச்சு விட்டபோது ஆடைகள் பற்றிய எண்ணம் வந்தது. மூன்று நாட்களுக்குண்டான ஆடைகளை அயர்ன் செய்து அடுக்கி வைத்தேன். சரி இனி என்னுடைய பயணத்தை துவங்கலாம் என்ற நிம்மதி வந்தது. வீட்டிற்கு வந்து இவையனைத்தையும் பார்த்தவர் , அட இதெல்லாம் ஏன் செஞ்ச