Skip to main content

Posts

ஆலயக்கலை வகுப்பின் முதல் நாள் முதல் பகுதி

அதிகாலை நான்கு மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. ரமாமணியும் , லக்ஷ்மி அம்மாவும் ஹீட்டர் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர்.   நான் பச்சை தண்ணீரையே எடுத்து குளித்துவிட்டு வெளியே வந்தேன். குளிரான பிரதேசங்களில் , பச்சை தண்ணீரில் குளித்துவிட்டு வெளியே வருவது குளிரை குறைக்கும் என்பது கடந்த இரண்டு வருடங்களில் நானாக கண்டு கொண்ட உண்மை. மலைப்பகுதியில் சீக்கிரம் வெளிச்சம் வந்துவிடுகிறது. ஒவ்வொருவராக நித்யவனத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. வருபவர்களின் முகத்தில்  மலர்ச்சியும் , கொஞ்சம் பதட்டமும் , கேள்வி பாவனையும் , நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது வரும் சிரிப்பும் , பயணத்தினால் வந்த களைப்பும் என பலவித முகபாவங்கள்.  காலை உணவு முடிந்ததும் புத்தருக்கும் , சரஸ்வதிக்கும் ஆசிரியர் மாலை அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் குரு நித்யா கூடத்திற்கு வந்தோம். ஜெயக்குமார் சார்  பாடல் பாடி  துவக்கினார். மணி அண்ணா மேடையில் தோன்றி , ஆசிரியர் வகுப்பு எடுத்து முடிக்கும் வரை யாரும் எதுவும் கேள்வி கேட்காதீர்கள். உங்களுடைய கேள்விகளை எழுதி வைத்துக் கொண்டு வகுப்
Recent posts

நித்யவனத்தை நோக்கிய பயணம்....

 நான் நித்யவனத்திற்கு செல்லும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து சுலபமாக சமையல் செய்வதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும்.  தோசை மாவு இருந்தால் போதும் எப்படியும் என் கணவர் சமாளித்து விடுவார் என்று எண்ணினேன். ஆனால் தொட்டுக் கொள்வதற்கு உண்டான பொடியை செய்ய வேண்டும். கொள்ளுப்பொடி , இட்லி பொடி , கருவேப்பிலை பொடி என மூன்று வகை பொடிகளை செய்து விட்டேன் . புதினாவும் , கொத்துமல்லி தழையையும் சேர்த்து ஊறுகாய் செய்தேன். தக்காளி தொக்கு செய்து வைத்தேன். இவற்றையெல்லாம் வைத்து மதியத்திற்கு சாதம் வடித்து சாப்பிட்டு விடுவார். பாசிப்பயிறை ஊற வைத்து முளைகட்டியவுடன் கிளாஸ் கண்டெய்னரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட்டேன். கேரட்களை தோள்சீவி நீளமாக நறுக்கி அதையும் பிரிட்ஜில் வைத்தேன். ஒரு லிட்டர் பாலை காய்ச்சி தயிர் செய்து அதையும் பிரிட்ஜில் வைத்தேன். இது போதும் என்று பெருமூச்சு விட்டபோது ஆடைகள் பற்றிய எண்ணம் வந்தது. மூன்று நாட்களுக்குண்டான ஆடைகளை அயர்ன் செய்து அடுக்கி வைத்தேன். சரி இனி என்னுடைய பயணத்தை துவங்கலாம் என்ற நிம்மதி வந்தது.  வீட்டிற்கு வந்து இவையனைத்தையும் பார்த்தவர் , அட இதெல்லாம் ஏன் செஞ்ச

வீடு என் வீடு.....

 சோபாவில் வந்து அமர்ந்தால் ஜன்னலின் வழியே தெரிவது எதிர்வீட்டின் உப்பரிகை தான். முகலாயபாணியில் கட்டப்பட்ட வீட்டின் முகப்பும் , உப்பரிகையும் நான் பார்த்ததும் மலர்ச்சி கொள்வது போல தோன்றும். மனிதர்கள் வீட்டை எத்தனை வடிவங்களில் கட்டுகிறார்கள். அதை அவர்கள் தினந்தோறும் ரசித்து மகிழ்ச்சியாக பார்க்கிறார்களா ? எத்தனை பேர் தங்களுடைய வீட்டை வெளியில் நின்று வருடத்தில் ஒரு நாளேனும் ரசிக்கிறார்கள். வீட்டின் வடிவங்களை பார்ப்பவர்கள் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர்களே எனத் தோன்றுகிறது. அவர்களும் ஜன்னலைத் திறந்தால் மட்டுமே.  நாங்கள்  கருங்குழியின் வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இரண்டரை வருடங்களாக ஜன்னலையே திறந்தததில்லை. கதவும் சாத்தியே இருக்கும். என் மனதையே  அப்படித்தான் வைத்திருந்தேனோ என இப்போது தோன்றுகிறது. ஏதோ ஒரு நாள் காலையில் திடீரென வீட்டின் அனைத்து ஜன்னல்களையுமே திறந்து வைத்தேன். வீடே குளுமையாகவும் , வெளிச்சமாகவும் மாறியது. இதற்கும் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்பட்டிருந்தாலும் நான் திறந்து வைக்க விரும்பாமல் இருந்த காரணத்தை என்னால் யூக

பேராசிரியர் டாக்டர். ஜினு கோஷியும் மாணவர்களும் ......

      செங்கல்பட்டிற்கு அருகே செட்டிமேடு பதூர் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடப்பதை அறிந்து கொண்டு அங்கே சென்று பார்த்தோம். நாங்கள் இப்போதிருக்கும் கருங்குழியில் இருந்து இருபது நிமிட பயணம் மட்டுமே செட்டிமேடு பதூர்.  இவ்வூர் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களை மீடியாக்கள் ஏற்கனவே பதிவு செய்துவிட்டன. அதனுடைய இணைப்புகளை  முடிவில் தந்திருக்கிறேன்.  அகழ்வராய்ச்சி மாணவர்களை பற்றியும் அவர்களுடைய பேராசிரியர்களைப் பற்றியும் மட்டுமே நான் எழுதுகிறேன்.   நாங்கள் அவ்விடத்தை அடைந்தபோது கல்லூரி மாணவ மாணவிகள் வெயிலை பொருட்படுத்தாமல் சிலை செதுக்குவதை போல மண்ணை உள் நோக்கி மிகக் கவனத்துடன் செதுக்கி கொண்டிருந்தனர். செதுக்கும் மாணவர்க்கு உதவியாக மாணவிகளும் அவர்கள் கூறும் விசயங்களை குறிப்பெடுத்து எழுதும்  மாணவர்களும் என முழுக்க முழுக்க இளம் தலைமுறையினர் மட்டுமே இருந்தனர். வரலாற்றை தோண்டுவது என்று தான் தேய்ந்த சொல்லாட்சியை கேள்விபட்டிருக்கிறோம். இங்கே பழங்கால வரலாற்றை செதுக்குவதை  நாங்கள் கண்டோம்.  ஒரு கேக் வெட்டுவதை போல படிப்படியாக மண்ணை இவ்வளவு அழகாக அகழ்ந்தெடுக்க முடிய

ஜிலேபி மீனும் ஈசூர் அணைக்கட்டும்......

              பனியில் மூழ்கியிருந்த வீடுகளின் இருளில் எங்கள் வீட்டில் மட்டுமே டியூப்லைட்  அதிகாலை நான்கு மணிக்கே எரிந்து கொண்டிருந்தது என்பதை வெளியில் வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது தான் உணர்ந்தோம்.  குளித்து முடித்து திருநீறை உடலெங்கும் பூசியிருந்த சிடுசிடு சைக்கிள் தாத்தா , பிள்ளையார் கோவிலுக்குள் செம்புக்குடம் நிறைய தண்ணீருடன் சாந்தமான முகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்.  அதிகாலை மனிதர்களை இவ்வளவு அழகானவர்களாக மாற்றி விடுவதன் மாயம் என்னவென்றே தெரியவில்லை.  கருங்குழியின் தெருக்களை கடந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டிலும் வாசல் மின்விளக்கை போட்டபடி தூக்க கலக்கத்துடனே இருந்த பெண்கள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். அதிகாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் அந்திமாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் கொண்டிருக்கும் கதைகள் ஏராளம். இரவு முழுக்க நிலவுக்கும் தனக்குமாக நிகழ்ந்த உரையாடல்களை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ரகசியப் புன்னகையின் மணமே அதிகாலை வாசல் தெளிக்கும் போது மண்ணிலிருந்து எழும் மணம். பகல் முழுக்க சூரியனுடன் சேர்ந்து தன்ன