Skip to main content

Posts

Showing posts with the label நினைவுகள்

அம்மாவின் முகங்கள்....

       பசுஞ்சாணத்தை குளிர்ந்த நீரில் கரைக்கும் போது மட்டுமே எழும் மணம் மார்கழியின் அதிகாலை தான். மூன்றாம் வகுப்பில் மீனலோசினி டீச்சர் காலை ஐந்து மணிக்கு வெள்ளி கோள் பூமிக்கு மிக அருகில் தெரியும் என்று வகுப்பெடுத்திருந்தார். சின்னதா மூக்குத்தி மாதிரி மினுங்கிட்டு இருக்கும் என்று கூறும் போது டீச்சருடைய மூக்குத்தி போல இருக்குமோ என்று கற்பனை செய்திருந்தேன். பெரியவள் ஆனதும் மீனலோசினி டீச்சர் போலவே மூக்குத்தி போட வேண்டும் என்று எண்ணினேன். அன்றிரவே அம்மாவிடம் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பும்படி கூறிவிட்டு உறங்கிப் போனேன். காலையில் அம்மா வாசல் தெளிக்கும் தப்தப்பென்ற சத்தம் கேட்டு வேகமாக பாயிலிருந்து எழுந்து ஓட எத்தனிக்கும் போது கொலுசின் திருகாணி பாயின் நூலில் மாட்டிக் கொண்டு தாமதப்படுத்தியது. நூலை வேகமாக இழுத்து பிய்த்துக் கொண்டு வெளியே ஓடினேன். அம்மா, உங்கள அஞ்சு மணிக்கு என்னய எழுப்ப சொன்னேன்ல என்று முகத்தில் விழுந்த முடியை இருபுறமும் தள்ளிவிட்டுக் கொண்டு வானத்தை நோக்கியபடி கேட்டேன். இன்னும் அஞ்சு ஆகல சாமி என்று கூறியது எங்கேயோ கனவில் கேட்டது. வானத்தின் ஓரத்தில் மினுங்...

வீடு என் வீடு.....

 சோபாவில் வந்து அமர்ந்தால் ஜன்னலின் வழியே தெரிவது எதிர்வீட்டின் உப்பரிகை தான். முகலாயபாணியில் கட்டப்பட்ட வீட்டின் முகப்பும் , உப்பரிகையும் நான் பார்த்ததும் மலர்ச்சி கொள்வது போல தோன்றும். மனிதர்கள் வீட்டை எத்தனை வடிவங்களில் கட்டுகிறார்கள். அதை அவர்கள் தினந்தோறும் ரசித்து மகிழ்ச்சியாக பார்க்கிறார்களா ? எத்தனை பேர் தங்களுடைய வீட்டை வெளியில் நின்று வருடத்தில் ஒரு நாளேனும் ரசிக்கிறார்கள். வீட்டின் வடிவங்களை பார்ப்பவர்கள் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர்களே எனத் தோன்றுகிறது. அவர்களும் ஜன்னலைத் திறந்தால் மட்டுமே.  நாங்கள்  கருங்குழியின் வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இரண்டரை வருடங்களாக ஜன்னலையே திறந்தததில்லை. கதவும் சாத்தியே இருக்கும். என் மனதையே  அப்படித்தான் வைத்திருந்தேனோ என இப்போது தோன்றுகிறது. ஏதோ ஒரு நாள் காலையில் திடீரென வீட்டின் அனைத்து ஜன்னல்களையுமே திறந்து வைத்தேன். வீடே குளுமையாகவும் , வெளிச்சமாகவும் மாறியது. இதற்கும் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்பட்டிருந்தாலும் நான் திறந்து வைக்க விரும்பாமல் இரு...