Skip to main content

Posts

Showing posts with the label வாசிப்பு

ஜன்னலில் ஒரு சிறுமி டோட்டோசான்...

  ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த டோட்டா-சான் என்ற சிறுமி, பேப்பரில் வரைய ஆரம்பித்து அது நீளமாக செல்லும் போது அதற்கு கீழே வரையாமல் தொடர்ந்து மர மேசையில் வரைந்து முடிக்கிறாள். இதைப் போன்ற பல காரணங்களுக்காக ஆசிரியரிடம்  தண்டனை பெற்று பள்ளியை விட்டு நீக்கம் செய்யப்படுகிறாள். இப்படிபட்ட சிறுமிக்கு  சாக்பீசை கையில் கொடுத்து "டோமோயி" பள்ளியின் கூட்ட அறையின் தரையில்  முழுவதும் எழுதிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு எவ்வளவு  சந்தோஷத்தை கொடுக்கும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் இருந்த பள்ளியின் கதை. சிறுவயதில் வீட்டுக்குள்ளேயே எனக்கென சிறு வீட்டை தலையணைகளை கொண்டு அமைத்துக் கொண்ட மகிழ்ச்சிக்கு இணையாகவே இருந்தது, ரயில்வே பெட்டிகளை வகுப்பறைகளாக கொண்ட "டோமோயி" பள்ளியை பற்றி படிக்கும் போது.  தலைமையாசிரியரான கோபயாஷியின், மலையிலிருந்து கொஞ்சம்..... கடலிலிருந்து கொஞ்சம்.....  என்ற உணவுப் பழக்கத்தை வீட்டில் இப்போது நானும் பின்பற்றி வருகிறேன். மெல்லு அதை மெல்லு.... நன்றாக அதை மெல்லு.... என்ற பாடலை டோட்டோசான் காயமடைந்த  ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் பாடுகிறாள். அதற்கு முன் மற்ற

நாரத ராமாயணம்

 ராமாயணம் அனைவருக்கும் போலவே எனக்கும் மிகச்சிறிய வயதிலேயே அறிமுகமாகியது.  என்னுடைய சித்தப்பா , எப்போதும் வீட்டில் யாரிடம் பேசினாலும் ,  வெடிய வெடிய ராமாயணம் கேட்டு வெடிஞ்சு எந்திருச்சு சீதைக்கு ராமன் சித்தப்பனாமா  என்று கூறுவார். எனக்கு இருந்த சித்தப்பா அவர் தான். சீதைக்கும் , ராமனுக்கும் அவர் தான் சித்தப்பா என்றால் சீதையும் , ராமனும்  எனக்கு அக்கா , அண்ணனாகத்தான்  இருக்க முடியும் என்று  நினைத்தேன் நான். அம்மாவிடம் சென்று சீதை யார் என்று கேட்டேன். சீதையின் கதையை சொல்லி அம்மா அழுதாள். கஷ்டம் தாங்க முடியாம பூமிக்குள்ள போயிட்டா மகராசி என்றார் அம்மா. பாட்டி இறந்தபோது மண்ணுக்குள் புதைத்தது நியாபகம் இருந்தது எனக்கு.  சீதை என்னுடைய சொந்த அக்கா என்று நம்பி சீதையை நினைத்து தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன். யாரிடமும் எதையும் தெளிவாக கேட்காமல் நானே அனைத்தையும் கற்பனை செய்து விட்டேன். பாட்டிக்கு வருஷாந்திரம் கும்பிடும் போது யாருக்கும் தெரியாமல் சீதா அக்காவுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டேன். வளர வளர ராமாயணம் என்ற கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்றும் என்னுடைய சித்தப்பா சீதைக்கும், 

மகாத்மா என்ற மனிதர்

    மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனை வாசித்து முடித்தேன். தமிழ் இணைய நூலகம் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகிறது. (  https://www. tamildigitallibrary.in/  )   . அதை எனக்கு வழி காட்டிய கடலூர் சீனு சார் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிலிருந்து தான் ,  சத்திய சோதனை, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, போன்ற தேசிய உடமையாக்கப் பட்டுள்ள பதிப்பில் இல்லாத நிறைய நூல்களை வாசிக்க இயன்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்தியாவும் விஷ்ணுபுரம் கெளஸ்தூபம் பகுதியில் வரும் பொலிவை இழந்த நகரம் போலத் தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் அழிந்து விடாமல் காப்பாற்றி மறு கட்டமைப்பு செய்தது காந்தி, அம்பேத்கர், நேரு, படேல், மற்றும் பல தலைவர்கள்  தான்.  புத்தகத்தில் ஐந்து பாகங்கள்  இருந்தது, அவரின் இளமைக் காலம் தொடங்கி , பாரிஸ்டர் படிப்பு, தென்னாப்பிரிக்கா  (நேட்டால்) காங்கிரஸ், தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம், சம்பரான் சத்தியாகிரகம்,ஒத்துழையாமை இயக்கம், நாகபுரி காங்கிரஸ் ஆரம்பம், கைராட்டினத்தின் வளர்ச்சி வரையில் இருந்தது.  காந்தியின் மீது அவதூறுகள் எவ்வளோ இன்னமும் சொல்லி வருகிறார்கள். அவர்களில் யாரேனும் க