Skip to main content

Posts

Showing posts from April, 2023

வாசனை....(அனுபவம்)

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல மணம் வந்த பிறகு வெட்டுங்கள் என்று கொடுத்தார் கடைக்காரர். நான் மணிக்கொரு முறை பலாவின் வாசனை வருகிறதா என்று அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன். நான்கு நாட்கள் ஆகியும் மணம் வரவில்லை. இன்று இரவில் தண்ணீர் தாகம் எடுத்ததால், எழுந்து வாட்டர் பாட்டிலை தேடினேன். மிக மிக ரகசியமாக பலாவின் வாசனை வந்தது.  மின்சாரமில்லாத ஒரு இரவில், ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே வீடு முழுவதற்கும் வெளிச்சத்தையும், மெல்லிய மண்ணெண்ணெய் வாசத்தையும் ஒரு சேர பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமைத்துக் கொண்டிருக்க, பழைய பாட நோட்டுகளின் அட்டையை கூடாரம் போல் வைத்து சிறு சிறு கிராமங்களை உருவாக்கி நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.  அந்த விளக்கின் அருகில் அமர்ந்து, போர்வையை போர்த்திக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, அக்கா படித்துக் கொண்டிருந்தாள். நாஞ்சில் நாட்டு " வாடைக் காற்று பலாவை வாட்டி எடுத்தது " என்று. பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தின் தென்னந்தோப்பில் இருந்த எங்களின் வீட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககவி நுகர்ந்த அந்த பலாவின் வாசனை , அக்கா படித்த  புத்தகத்தின் வழியாக

மகாத்மா என்ற மனிதர்

    மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனை வாசித்து முடித்தேன். தமிழ் இணைய நூலகம் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகிறது. (  https://www. tamildigitallibrary.in/  )   . அதை எனக்கு வழி காட்டிய கடலூர் சீனு சார் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிலிருந்து தான் ,  சத்திய சோதனை, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, போன்ற தேசிய உடமையாக்கப் பட்டுள்ள பதிப்பில் இல்லாத நிறைய நூல்களை வாசிக்க இயன்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்தியாவும் விஷ்ணுபுரம் கெளஸ்தூபம் பகுதியில் வரும் பொலிவை இழந்த நகரம் போலத் தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் அழிந்து விடாமல் காப்பாற்றி மறு கட்டமைப்பு செய்தது காந்தி, அம்பேத்கர், நேரு, படேல், மற்றும் பல தலைவர்கள்  தான்.  புத்தகத்தில் ஐந்து பாகங்கள்  இருந்தது, அவரின் இளமைக் காலம் தொடங்கி , பாரிஸ்டர் படிப்பு, தென்னாப்பிரிக்கா  (நேட்டால்) காங்கிரஸ், தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம், சம்பரான் சத்தியாகிரகம்,ஒத்துழையாமை இயக்கம், நாகபுரி காங்கிரஸ் ஆரம்பம், கைராட்டினத்தின் வளர்ச்சி வரையில் இருந்தது.  காந்தியின் மீது அவதூறுகள் எவ்வளோ இன்னமும் சொல்லி வருகிறார்கள். அவர்களில் யாரேனும் க

குப்பை.....( அனுபவம் )

 வீடே குப்பையாக இருப்பதை உணர்ந்தேன். அடுக்கியிருந்த புத்தகங்களை தூசியை துடைத்து திரும்பவும் அடுக்கினேன்.நுண்ணிய தூசிகளை வெள்ளைத் துணியில் மட்டுமே உணர முடிந்தது. வெறும் பார்வை தரும் ஏமாற்றத்தை உணர்ந்தேன்.புத்தகங்கள் வெளிவந்த காலத்திற்கும் அதை நான் படித்த காலத்திற்கும் இருக்கும் கால இடைவெளிகளை இந்த மெல்லிய தூசிகளைப் போலவே துடைத்தெறிய முடிந்தால் ? பூஜை அறையின் கதவு கூட மெல்லிய எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தது.குத்துவிளக்கின் திரிகள் எண்ணெயை முடிந்த வரைக்கும் உறிஞ்சி ஒளி விட்டுக் கொண்டிருந்தன. எண்ணெய் இருந்த குத்துவிளக்கின் பகுதி பாசி படிந்த நிலையில் இருந்தது.சிக்கு பிடித்த எண்ணெய் வாசம் நாசியில் ஏறியது. எலுமிச்சை நீரை வெள்ளைத் துணியில் நனைத்து கதவையும், சாமி படங்களையும், குத்துவிளக்கையும் துடைத்தேன். கடவுளர்கள் அபிஷேகம் முடிந்த பளபளப்பில் அருள்பாலித்தனர்.  அவருடைய அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.எத்தனை பில் காகிதங்கள்.எழுத்துக்கள் எல்லாம் மறைந்து விட்டது. ஆனாலும் அதை செல்ஃபிலேயே வைத்திருக்கிறார். மொத்தமாக எடுத்து போடும் போது ஏடிஎம் மெசினை சுற்றியிருப்பதை போல இருந்தது. டைரிகளில் இரண்டு ப