Skip to main content

Posts

Showing posts with the label சமூகம்

மினிமலிஸ்ட்....

                          மினிமலிஸ்ட்  என்ற வார்த்தை எப்போதுமே மனதை நெருட செய்து கொண்டே  இருக்கிறது. வெறும் மூன்று ஆடைகள்  மட்டுமே போதும் அது கிழிந்தா ல்  அடுத்தது வாங்கினால் போதும் இது தான்  மினிமலிசிட் என்பதன் விளக்கமா  என்றும் தெரியவில்லை.தன்னுடைய நிலை என்னவென்பதை ஏற்கனவே நிலை நாட்டியவர்கள்  மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை எண்ணி பயப்பட வேண்டியதில்லை. ஆனால் தற்போது தான்  சமூகத்தில் எழுச்சி பெற்று வரும் மக்கள், மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்பதை யோசித்து தான் செயல்பட முடியும். நல்ல சம்பளத்தில் வாழ்ந்து அதன் பிறகு அதில் மனம் நிம்மதி இல்லாததை  உணர்ந்து  மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்பவர்கள்  முதல் தலைமுறையில் நல்ல துணியை போடுபவன் மனிதில் குற்ற உணர்ச்சியையே உண்டாக்குகிறார்கள். மினிமலிஸ்ட்களை   உலகம் கொண்டாவதை  எப்படி ஏற்றுக்  கொள்ள முடியும்? காந்தியே அவருடைய ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் போல் உடை உடுத்தி அதை குடும்பத்தினரிடமும் திணித்தவர் த...

நாம் விளம்பரங்கள் மட்டும் தானா?

  காலனியாதிக்கத்தில் இந்தியாவின் செல்வத்தை பல வகைகளில் எடுத்து சென்ற வெளிநாட்டவர்கள் தற்போது மக்கள் வளத்தை , தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கேயோ இருந்து கொண்டு தங்களுடைய பொருட்களை  சந்தை படுத்துவது என்பது வரை வந்திருக்கிறார்கள்.  வெளிநாட்டவர்கள் இந்திய மனதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஆணோ , பெண்ணோ இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுவதைப் போல வீடியோக்கள் வெளியிட்டால் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பல கோடி கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் வெள்ளைக்கார வீடியோ பெண்ணோ , ஆணோ நல்ல வருமானத்தில் வாழ்வார்கள். இதைப் போன்ற வீடியோக்களை பார்ப்பவர்கள் சராசரி இந்தியர்கள் என்று வைத்துக் கொள்ள முடியும்.  அடுத்த வகை தங்களை இந்தியாவிலேயே வாழும் தனித்தன்மை உடையவர்களாக எண்ணிக் கொள்பவர்களுக்கான வீடியோக்கள். அப்பர் மிடில்க்ளாஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.  கொரியா மற்றும் ஜப்பான் , ஸ்கேண்டிலேவியா , இங்கிலாந்த் நாட்டை சார்ந்தவர்கள்  வெளியிடும்  வீடியோக்கள் வெறுமனே வீட்டின் நிகழ்வுகளை யாரும் குரல் கொடுக்காமல் , முகங்களை காட்டாமல்  மெல்லிய இசையு...

கல்வி , பொருளாதாரம் பெண்களுக்கான திருமண வாழ்க்கையை தருகிறதா?

 பெண், கல்வி ,விடுதலை எனும் கட்டுரைகள் தளத்தில் வெளியாயிருந்தது. அதில்  கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், வேலைக்கு செல்வதை தடை செய்யப்பட்ட பெண்கள் என்று நிறைய பிரச்சினைகள் எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால் கல்வி கற்று , நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுடைய திருமணம் அவர்களுடைய சொந்த குடும்பத்தினராலேயே மறுக்கப்படுவது எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.  பெங்களூரில் பி‌ஜியில் இருந்த போது எங்களுடன்  தார்வாடு பகுதியை சேர்ந்த ஒரு அக்கா தங்கியிருந்தார். நாற்பது வயதிருக்கும். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர் ஆக வேலை செய்து வந்தார். யாருடனும் பேசவே மாட்டார். நாம் ஏதாவது பேசினாலும் இரண்டொரு வார்த்தை தான் பேசுவார். ஆபிஸ் செல்வதும் , பிஜி அறையில் தங்கியிருப்பதும் தான் அவரது வாழ்வே.  திடீரென ஒரு நாள் ஆபிஸிலிருந்து வரும்போது ஹாலில் அமர்ந்து அனைத்து பெண்களுடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் அந்த அக்கா.  அவருக்கு ஒரு  தங்கையும், தம்பியும் இருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்ததே இந்த அக்கா தான் என்பதும், தம்பி, தங்கைக்கு குழந்தைகள் பள்ளி செல்...