Skip to main content

Posts

ஆங்கில மொழி திரைப்படம் (Life With Father)

  1947- இல் வெளியான ஆங்கில மொழி   திரைப்படம் ஒன்றை பார்த்தேன். ஷேர் மார்க்கெட்_இல் இருக்கும் தந்தை, அவரது மனைவி மற்றும்  நான்கு ஆண்  குழந்தைகள் இவர்களின்  வாழ்வில் நடக்கும்   உரையாடல்கள், விவாதங்கள், மகிழ்ச்சியான  தருணங்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் இவற்றை மட்டுமே கொண்டு  ஒரு மனதிற்கு இனிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . ஞானஸ்தானம் எடுக்காமல் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ்ந்து வரும் தந்தை, அனைத்திலும் கெடுபிடியாக  நடந்து கொள்கிறார். அவருடைய அனைத்து செயல்களையும் புரிந்து கொண்டு  அதற்கு தகுந்த படி வாழ்வை கொண்டு செல்லும் மனைவி, சில நேரத்தில் அவர்  அளவு மீறி சத்தமிடும் பொது, ஷ்ஷ்ஹ் என்ற ஒரு சத்தம் மனைவியிடம் வந்ததும் அப்டியே அமைதியாக மாறிவிடுகிறார் . குழந்தைகளுக்காக அனைத்து தேவைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்கும் தந்தை. மற்ற நான்கு ஆண் பிள்ளைகளை கையாள்வதை போலவே கணவனையும் கையாள்கிறார் மனைவி.  கோபமாக எதையோ பேசிவிட்டு பியானோவை வாசிக்க ஆரம்பிக்கும் கணவர் அதன் மேலிருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த...

2024 _ புத்தாண்டு துவக்கம்....

  கருந்துளையை ஆராய்ச்சி செய்வதற்காக உலகில் இரண்டாவதாக ஏவுகணையை  அனுப்பியுள்ளது இஸ்ரோ.‌ ஜனவரி முதல் தேதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக Xpo SAT அனுப்பப்பட்டது.  சந்திராயன் - III , ஆதித்யா - L1 ஆகியவற்றின் launch -ன் போதும் பதிவு செய்ய முயன்றோம். இணைப்பு வெளியான‌ ஐந்து நிமிடத்திற்குள் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.  இந்த முறையும் இணைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்பட்டு பதிவு செய்தோம். நம்முடைய அடையாள அட்டை , மற்றும் நம்மை பற்றிய தனிநபர் விபரங்கள் , வாகனத்தில் சென்றால் அவற்றின் பதிவு எண் , இவை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டியவை. இதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை.  ஹரிகோட்டா , சென்னையிலிருந்து 2 மணி நேரப் பயணம். காலை ஒன்பது மணிக்கு லான்ச், காலை 5.30 - 8.30 வரை உள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும். நாங்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4.00 மணிக்கு கிளம்பி அங்கே செல்லும் போது 6.15 ஆகியிருந்தது. முதன்மை சாலையிலிருந்து சூலூர்பேட்டா செல்லும் சாலைக்கு இறங்கி , ஹரிகோட்டாவை நோக்கி...

2023 _ மீள்பார்வை

  2023 _  மீள்பார்வை ஒலிப்பதிவு செய்த புத்தகங்கள்...  1. கானகத்தின் குரல் 2. கோயில் யானை 3. மூதுரை 4. நாரத ராமாயணம் 5. மனிதன் சூழ்நிலையின் தலைவன் 6. டோட்டோசான்‌ / ஜன்னலில் ஒரு சிறுமி 7. நான் கண்ட காந்தி 8. மூன்று சிறுகதைகள் வாசிப்பு அனுபவ  கட்டுரைகள் : 1. நாரத ராமாயணம் வாசிப்பு அனுபவம் 2. டோட்டோசான் வாசிப்பு அனுபவம் 3. கோயில் யானை வாசிப்பு அனுபவம் பொது கட்டுரைகள் : 1. கல்வி , பொருளாதாரம் பெண்களுக்கு சுதந்திரம் தருகிறதா? 2. விளம்பரங்களின் உலகம் பயண கட்டுரைகள் : 1. செட்டிநாடு  2. மேல் சித்தாமூர் சிறார் கதைகள் :  1. டுடூம் நூலகம் 2. மீனுகா பயணங்கள் : 1. மேல்சித்தாமூர் ஜைன மடம் 2. மாமல்லபுரம் 3. சீயமங்கலம் சிவன் கோவில் 4. பாண்டிச்சேரி 5. காரைக்குடி 6. ராமேஸ்வரம் 7. தூத்துக்குடி 8. திருநெல்வேலி  9. கோவில்பட்டி 10. கயத்தாறு 11. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 12. கன்னியாகுமரி 13. நாகர்கோயில் 14. தொட்டிபாலம் 15. திற்பரப்பு அருவி 16. திருவரம்பு விஷ்ணு கோவில் 17. திருப்பரங்குன்றம் 18. மதுரை அணைப்பட்டி 19. குலதெய்வம் கோவில் 20. பழனி கோவில் தரிசனம் 21. திருப்பதி 22. I...

செட்டிநாடு.....

  எந்த நீர்மையின் மீதிருந்த வெறுப்பினால் தலைமுடி கூட கருகும் வெயில் பிரதேசத்தில் வாழ முற்பட்டார்கள் ?   மிகப் பெரிதான வீடுகளின் அமைப்பு  எதையோ நோக்கி அறைகூவல் விடுப்பது போலவும் அவற்றில் உறையும் ஆழ்ந்த அமைதி மனதை நிலை குலையச் செய்வது போலவும் ஒரே சமயத்தில் இரு வேறு உணர்வுகளை தந்தது. அனைத்து வீடுகளும் ஒரே காலக்கட்டத்தை சார்ந்தவை.  ஒரு  சமூகத்தின் மாபெரும் எழுச்சி. அச்சமூகத்தின் முன்னோர்களின் ஆழ்கனவுகள்.   எவ்வளவு பெரிய சரிவை சந்தித்திருந்தால் இவ்வளவு உயரம் எழும்பி வரும் ஆன்ம வல்லமையை அச்சமூகம் பெற்றிருக்ககூடும் ? வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு தெருவில் ஆரம்பித்து இன்னொரு தெருவில் தங்களை நிறைவு செய்திருந்தன.  புழுதி பறக்காத அகண்ட தெருக்கள்.  கழிவுநீர் செல்லும் வழி எதுவென்றே தெரியாத அளவிற்கான கட்டிட நுட்பம்.  ஒவ்வொரு வீட்டின் கீழ்தளத்திலும் குதிரை வண்டிகள் நிற்பதற்கான அறைகள் கதவுகளுடன் இருந்தன. முதற்தளத்தில் தான் வீடுகளே ஆரம்பிக்கின்றன.எந்த ஆழத்திலிருந்து தப்புவதற்காக இவ்வளவு உயரமான வீடுகளை கட்டமைத்தனர் ?   ஒவ்வொரு வீட்டிலும் முன் வாய...

நாம் விளம்பரங்கள் மட்டும் தானா?

  காலனியாதிக்கத்தில் இந்தியாவின் செல்வத்தை பல வகைகளில் எடுத்து சென்ற வெளிநாட்டவர்கள் தற்போது மக்கள் வளத்தை , தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கேயோ இருந்து கொண்டு தங்களுடைய பொருட்களை  சந்தை படுத்துவது என்பது வரை வந்திருக்கிறார்கள்.  வெளிநாட்டவர்கள் இந்திய மனதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஆணோ , பெண்ணோ இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுவதைப் போல வீடியோக்கள் வெளியிட்டால் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பல கோடி கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் வெள்ளைக்கார வீடியோ பெண்ணோ , ஆணோ நல்ல வருமானத்தில் வாழ்வார்கள். இதைப் போன்ற வீடியோக்களை பார்ப்பவர்கள் சராசரி இந்தியர்கள் என்று வைத்துக் கொள்ள முடியும்.  அடுத்த வகை தங்களை இந்தியாவிலேயே வாழும் தனித்தன்மை உடையவர்களாக எண்ணிக் கொள்பவர்களுக்கான வீடியோக்கள். அப்பர் மிடில்க்ளாஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.  கொரியா மற்றும் ஜப்பான் , ஸ்கேண்டிலேவியா , இங்கிலாந்த் நாட்டை சார்ந்தவர்கள்  வெளியிடும்  வீடியோக்கள் வெறுமனே வீட்டின் நிகழ்வுகளை யாரும் குரல் கொடுக்காமல் , முகங்களை காட்டாமல்  மெல்லிய இசையு...