Skip to main content

Posts

உள்ளான் பறவையின் தியான மையம் .....

  உள்ளான் பறவையின் தியான மையம் .....     சூரியன் மேற்கு வானில்   மறைந்து கொண்டிருந்தது. சிவப்பு வெளிச்சம் ஏரி   எங்கும் பரவி இருந்தது.   ஈசல்கள் பறப்பதற்கு நேரம் பார்த்து கொண்டிருந்தன.   வெளியே வானிலை   எப்படி இருக்கிறது? என்று கேட்டது பாட்டி ஈசல் .   குட்டி ஈசல் அமைதியாக ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருந்தது.   அட குட்டி! என்னாச்சு ? ஏன் பேச மாட்டேங்கிறாய்!   பாட்டி ! நான் வெளியே வானிலை எப்படி இருக்கிறது என்று பார்க்க சென்றேன்!   ஆமாம்! அதன் பிறகு தான் நீ எதுவுமே பேச மாட்டேங்கிறாயே!   நான் ஒரு விளம்பரப் பலகையை பார்த்தேன்!   என்னால் அதை நம்பவே முடியவில்லை!   என்ன விளம்பரம்?   உள்ளான் பறவையின் தியான மையம் குருஜி: நெடுங்கால் உள்ளான் இடம்: சதுப்புநிலம்   நேரம் : காலை 4-5   மாலை 5-6   இது தான் அந்த விளம்பரத்தில் இருந்தது!     இதை கேட்டதும் மற்ற அனைத்து ஈசல்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டன!   உள்ளான் பறவைக்கு என்னவாயிற்று...

மீன்கொத்திக்கு வந்த காய்ச்சல்.....

  மீன்கொத்திக்கு வந்த காய்ச்சல்.....     நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்த அதிகாலை நேரம். சூரியன் மெதுவாக உதயமாகி கொண்டிருந்தது. மருத்துவர் தேனீ வேகமாக பறந்து சென்றது. அதன் பின்னாலேயே மருத்துவ பெட்டியை எடுத்துக் கொண்டு பணியாளர் தேனீ பறந்து வந்தது. எங்கே இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்? என்று கேட்டது தட்டாம்பூச்சி. மீன் கொத்திக்கு காய்ச்சல் என்று செய்தி வந்தது. அதற்கு மருத்துவம் பார்க்கத்தான் செல்கிறோம் என்று பறந்து கொண்டே கூறியது பணியாளர் தேனீ. என்னது மீன் கொத்திக்கு காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட்டது தட்டாம்பூச்சி. மருத்துவர் தேனீ மீன் கொத்தியின் கூட்டை தேடி ஒரு வழியாக அதை கண்டுபிடித்தது. கொஞ்சமாக நீர் இருந்த சிறு ஓடையின் சரிவான தரையில்   ,கிடையாக வளைதோண்டி அதில் கூடமைத்திருந்தன. முன்பக்கம் சற்று சரிவாக இருந்தது. உள்ளே   தேனீ சர்ர்ரென்று நுழைந்தது .   உள்ளே போகப் போக சற்றே உயர்ந்து கொண்டே சென்றது கூடு. தேனீயும் அதற்கு தகுந்தாற் போல் பறந்து சென்றது.  இப்படி ஒரு கூட்டில் பறந்து செல்வதில் தேனீ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   இறுதியி...

குருகு எப்படி சாட்சி சொல்லும்?

  குருகு எப்படி சாட்சி சொல்லும்?     சூரியன் உதயம் ஆவதற்கு முன் வரும் சிறிய வெளிச்சம் வானில் தெரிந்தது. அப்போது தான் பறவைகள் கூட்டை விட்டு வெளிய வர  ஆரம்பித்தன. ஆனால்   அதற்கு முன்பாகவே ஒரே பரபரப்பாக இருந்தது. நாகணவாய்   பறந்து பறந்து செய்தியை ஒவ்வொரு பறவை கூட்டிற்கும் கொண்டு சென்றது. செய்தியை கேள்விப்பட்ட பறவைகளால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. சில்வண்டுகள் கத்திகொண்டே இருந்தன. இதுவரைக்கும் நம்முடைய பறவைகளின் கூட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது இல்லையே ! பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கூட்டம் கூடியது. கழுகு தாத்தா அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் மற்ற பறவைகள் அமர்ந்திருந்தான். நாகணவாய் செய்தியை திரும்பவும் கூட்டத்தில் வாசித்தது. ஆறு மணி குருவியும் , கரிச்சான் குயிலும்   ஒரே   பாடலை சொந்தம் கொண்டாடுகின்றன. அது முதன் முதலில் யார் உருவாக்கிய பாடல்   என்பதில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அதை பற்றி பேசவே இங்கு நம் கூடி உள்ளோம். பறவைகளின் கூட்டத்தில் சலசலப்பு மறைந்தது. கழுகு தாத்தா பேச ஆரம்பித்தார். கரிச்சான் குயிலே அ...

பூங்கா வாசகம்....

         இன்று பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துக் கொண்டே நடந்தேன்.  அதில் சீராக சிந்தனை செய் , விரைவாக செயல்படு என்ற வாசகம் சிறு வெளிச்சம் போல அறுபட்ட எண்ணங்களை இல்லாமலாக்கியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? நடந்து கொண்டிருக்கிறேன். பூங்காவில் இருக்கும் நபர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் பலவகையான எண்ணங்களை தொடர்பில்லாமல் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் நான் எங்கே இருக்கிறேன்? இதுவரைக்கும் எண்ணங்கள் தான் சிந்தனைகள் என்று நினைத்திருந்தேன். ஒரு எண்ணத்தில் இருந்து இன்னொரு எண்ணத்திற்கு மனம் தாவிச் செல்கிறது. இதை நான் ஏதோ ஒரு அதிமேதாவித்தனம் என்று தான் நம்பியிருக்கிறேன். ஆனால் இந்த வாசகம் அதை ஒரு குப்பை கூடம் என கூறிவிட்டது. Sakamoto என்ற ஒரு ஜப்பானிய கார்ட்டூன் சீரிஸ் ஒன்றை  விக்னேஷ்வர் பார்த்து வருகிறார். வன்முறை சார்ந்தது தான். ஆனால் அதில் சில நல்ல எபிசோடுகள் வரும் போது என்னை பார்க்க சொல்வார். அதில் வரும் நாயக...

பக்கத்து வீட்டுக்காரம்மாவின் பாத்திரம்.....

  நாம் புழங்கும் பொருட்கள் நம்முடைய முகமாகவே மாறி விடுவதன் மாயத்தை எண்ணி புன்னகை வந்தது. பக்கத்து வீட்டுக்காரம்மா பலகாரம் கொடுத்து விட்ட பாத்திரம் நம் வீட்டில் அந்நியமாகவே தெரிவது எப்படி ? வீட்டின் பாத்திரங்கள் அதை ஏற்றுக் கொள்வதேயில்லை. நான் எப்போது வீட்டுக்கு செல்வேன்? என்று ஏக்கத்துடனும் , பரிதவிப்புடனும் இருக்கும் பால்வாடி குழந்தையை போல இருக்கிறது அது.  அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதில் நானும் ஏதேனும் பலகாரத்தை போட்டு தான் கொடுக்க வேண்டும்.  இரும்பு வடசட்டியை எடுக்கும் போதெல்லாம் பெரியம்மாவின் சாயல் தெரிகிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக என் அம்மா அதை பயன்படுத்தி வந்திருந்தாலும் அம்மாவின் சாயலை அதில் நான் ஒரு போதும் கண்டதில்லை.  அம்மாவிற்கு பெரியம்மா கொடுத்த நல்ல கனமான இரும்பு வடசட்டி. திருமணத்துக்கு பிறகு அம்மாவின் வீட்டுக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் சூட்கேசில் வைத்து தூக்கி கொண்டு வந்தேன். பெரியம்மா எனக்காகவே அம்மாவிடம் கொடுத்தாள் என்று எண்ணுகிறேன்.  வடசட்டி சூடாக ஆரம்பித்தது . நிலக்கடலையை எடுத்து போட்டேன். தீயை மிதமாக வைத்தேன். முதலில...