Skip to main content

Posts

மினிமலிஸ்ட்....

                          மினிமலிஸ்ட்  என்ற வார்த்தை எப்போதுமே மனதை நெருட செய்து கொண்டே  இருக்கிறது. வெறும் மூன்று ஆடைகள்  மட்டுமே போதும் அது கிழிந்தா ல்  அடுத்தது வாங்கினால் போதும் இது தான்  மினிமலிசிட் என்பதன் விளக்கமா  என்றும் தெரியவில்லை.தன்னுடைய நிலை என்னவென்பதை ஏற்கனவே நிலை நாட்டியவர்கள்  மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை எண்ணி பயப்பட வேண்டியதில்லை. ஆனால் தற்போது தான்  சமூகத்தில் எழுச்சி பெற்று வரும் மக்கள், மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்பதை யோசித்து தான் செயல்பட முடியும். நல்ல சம்பளத்தில் வாழ்ந்து அதன் பிறகு அதில் மனம் நிம்மதி இல்லாததை  உணர்ந்து  மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்பவர்கள்  முதல் தலைமுறையில் நல்ல துணியை போடுபவன் மனிதில் குற்ற உணர்ச்சியையே உண்டாக்குகிறார்கள். மினிமலிஸ்ட்களை   உலகம் கொண்டாவதை  எப்படி ஏற்றுக்  கொள்ள முடியும்? காந்தியே அவருடைய ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் போல் உடை உடுத்தி அதை குடும்பத்தினரிடமும் திணித்தவர் த...

கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடம்......

    கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடத்திற்கு இன்று சென்றோம். வாயில் முகப்பில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு  செய்யும் கீதா உபதேச சித்திரம் வரையப்பட்டிருந்தது. சட்டென்று அனைத்துமே புள்ளி வைத்த கோலமாக தெரிந்தது. உள்ளே சென்றதும் ருக்மணி அருண்டேல்  புகைப்படம் அவருடைய ஐம்பது வயதில் எடுக்கப்பட்டிருக்கலாம்  .  பருத்தியிலிருந்து எப்படி பஞ்சை எடுக்கிறார்கள். பஞ்சிலிருந்து எப்படி நூலாக மாற்றுகிறர்கள் என கண் முன்னே செய்து காட்டினார்கள். இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தி பருத்தியில் இருக்கும் விதைகளை நீக்கினார்கள் . கைக்கு அடக்கமான பத்து சீமார்  குச்சிகளை கொண்டு  விதை நீக்கிய  பஞ்சை மரப்பலகையில் வைத்து தட்டினார்கள். பஞ்சு , பஞ்சு பஞ்சாக மாறியது. அதன் பின்னர் வில்லை கொண்டு அதனுடைய பஞ்சை அதில் வைத்து நீவினார்கள். பஞ்சு மிருதுவாக மாறியது.இதை இரன்டு முறை செய்தார்கள். பஞ்சு நீளமாக நூலிழையாக மாறியது. அதன் பிறகு வாழை  மட்டையில் பஞ்சு நூலிகளை வைத்து, ராட்டினத்தில் நூல் சுற்றும் ஊசியின் முனையை பஞ்சு நூலிழைகளுடன் சேர்த்து சுற்ற  ஆரம்பித்தார்கள். நூல் கண்டில் ப...

பருத்திக்கறை பூச்சி...

       புத்தகங்கள் அதனதன் இடத்தில் சரியாக உள்ளனவா என பார்த்துவிட்டு ,     'The Magic Finger' கதையை படிக்க ஆரம்பித்தேன். மூன்று பக்கங்களை கடந்திருப்பேன். என்னுடைய வலது காலின் அருகில் ஏதோ ஒன்று நகர்வது போல் உணர்ந்தேன். சட்டென்று காலை உதறிவிட்டு எழுந்து கொண்டேன்.  உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி. இரண்டு உணர் கொம்புகளுக்கு அருகில் தலை அடர் சிவப்பு நிறமும்‌ , பின்கழுத்து முக்கோண வடிவில் கருப்பு நிறத்துடன் இருந்தது. நடுமுதுகில் தொடங்கி பின் பக்கம் வரை முக்கோணமாக தீபத்தின் ஒளிச்சுடர் போல கருப்பு நிறம் பரவியிருந்தது.  ஒரு பக்கத்திற்கு மூன்று கால்கள் வீதம் ஆறு கால்க ள்  இருந்தன.கால்கள் சிவப்பு நிறத்திலும் , நுனியில் வெண்மை நிறமும் கொண்டிருந்தது.  இது வரையில் நான் பார்த்திராதது. லேடி பக் ஆக இருக்கவும் வாய்ப்பில்லை. லேடி பக் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த சிவப்பு பூச்சி சற்று நீளமாக இருந்தது.  இது எப்படி நூலகத்திற்குள் வந்தது? மூன்று நாட்களாக பென்ங்கால் புயல் காரணமாக பள்ளி விடுமுறையாக இருந்தது. அதிகப்படியான மழையினால் இந்த ...

டேபிள் டென்னிஸ் டோர்னமென்ட்....

  டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி என்று என் கணவர் கூறியதும் நாம் செல்லலாம் என்றேன் நான். சென்னைக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அலுவலகம் சார்ந்த அமைப்புகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அண்ணா நகரில் இருக்கும் SBOA பள்ளிக்கு செல்வதற்கே எங்களுக்கு நாற்பத்தைந்து நிமிடம் ஆகும். இருந்தாலும் சென்று தான் பார்ப்போம் என சென்றோம். காலை 7 மணிக்கு SBOA பள்ளிக்கு சென்றால் , விளையாட்டு போட்டிகள் SBOA மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது என செக்யூரிட்டி கூறினார். அதுவும் ஒரு ஐந்து நிமிட பயணம் தான்.  SBOA மெட்ரிக்குலேசன் என் கணவருக்கு மனதளவில் நெருக்கமான வளாகம். அங்கே தான் அவர் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படித்தார். கிரவுண்டில் காரை பார்க் செய்துவிட்டு சுற்றிப் பார்த்தார். மனோ , இந்த கிரவுண்ட் எவ்ளோ பெரிசா இருக்கும் தெரியுமா ? இப்போ எப்படி இவ்ளோ குட்டியா இருக்கு ? வேற ஏதாச்சும் பில்டிங் கட்டிட்டாங்களோ ? என அந்த குட்டி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வந்தார். எனக்கு சிரிப்பாக வந்ததது. ஏங்க , அப்போ நீங்க சின்ன பையனா இருந்திருப்பீங்க அதனால் உங்களுக்கு இதே கிரவுண்ட் ரொம்ப பெர...

ஐஐடி மாராத்தான் .....

மாராத்தான் உண்மையில் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது. நேற்றிரவு தான் 5கிமீ மாரத்தான் ஐஐடி மெட்ராஸில் நடப்பதை அறிந்து கொண்டோம். காலை ஐந்தரை மணியளவில் அங்கே இருக்க வேண்டும். நாங்கள் இருக்குமிடத்தில் இருந்து பத்து நிமிடம் தான் . ஆனால் நாங்கள் நான்கு மணிக்கே எழுந்து கொண்டோம். ஐந்து மணி ஆகும் போது காரில் பயணத்தை துவக்கினோம்‌ . வீட்டைத் தாண்டியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் கூட ரன்னிங் செல்பவர்கள் குறைவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். அடையார் ஆற்றங்கரையை கடக்கும் போது சாக்கடை நாற்றம் எடுத்தது. பகல் பொழுதுகளில் கடக்கும் போது வாகனங்களின் புகை , ஹார்ன் சத்தங்கள், ஆட்டோக்களின் இரைச்சலினாலும் சாக்கடை நாற்றம் அமுங்கி போகிறது. ஒருவேளை வெறிச்சோடியிருந்த அடையார் ஆற்றங்கரை பாலமும் ,  அதிகாலையும் ,  தூறல் மழையும் , சாக்கடை நாற்றத்தை தூண்டியிருக்கலாம் அல்லது எங்களின் கவனத்திற்கு வந்ததிற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.  ஐஐடிக்குள் நுழையும் போது செக்யூரிட்டி மாரத்தான் ஆ என்று கேட்க ஆம் என் கூறி உள்ளே சென்றோம். ஐஐடிக்குள் செல்வது எனக்கு முதல் முறை.  பொள...