Skip to main content

Posts

குக்குடம் எதை தான் தேடுகிறது !

    குக்குடம் எதை தான் தேடுகிறது !   வானம் இருண்டிருந்தது. மழை பெய்ய போவதற்கான வாசம் வீசியது. வேப்பிலை ஒன்றை  கொடை  பிடித்து சென்றது எறும்பு. சட் சட் என மழைத்துளிகள் விழுந்தன.  வேகமாக ஓடி பெரிய புல்  ஒன்றின் அடியில் நின்றது எறும்பு. தவளைகளின் கொரக்.. கொரக் என்ற சத்தம் கேட்டது.   மழை பெய்தால் தவளைகளுக்கு தான் கொண்டாட்டம்! என்று சலித்து கொண்டது எறும்பு. குவிக் குவிக் என்ற பாடல் மகிழ்ச்சியாக ஒலித்தது!  எனக்கும் கூட தான்! என்று வந்து அமர்ந்தது மழைக்காடை.  ஹ்ம்ம் ! குவிக் குவிக் என்ற சத்தம் வந்ததும் தெரிந்து கொண்டேன்! என்றது எறும்பு. மழை எப்போது நிற்பது? நான் எப்போது உணவை சேமிப்பது? என புலம்பியது எறும்பு. நீ தான் ஏற்கனவே உணவை சேமித்து வைத்திருப்பாயே! என்றது மழைக்காடை. அந்தக்  கதை தெரியாதா ? உனக்கு ? என சலித்துக்  கொண்டது எறும்பு.  விருப்பமிருந்தால் கூறு! என்று றெக்கையை உலுக்கி கொண்டது மழைக்காடை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உணவை சேர்த்து வைத்திருந்தேன்! குவிக்! என்றது மழைக்காடை! நேற்று ஒரு கோழி வந்...
Recent posts

செம்போத்து குருவியின் காதணி விழா !

  செம்போத்து குருவியின் காதணி விழா !         மிக அமைதியாக இருந்தது பகல் பொழுது. சூரியனின் வெப்பம் மிதமாக இருந்தது. இரை   தேடும் பறவைகள் அனைத்தும் எங்கேயோ பறந்து சென்று விட்டன. மெதுவாக குழியை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தது குழிநரி பூச்சி. வெளியே ஒரு அழைப்பிதழ் இருந்தது. நமக்கு யார் அழைப்பிதழ் வைத்திருப்பார்கள்? என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டே குழிக்குள் சென்றது. விளக்கை ஏற்றி வைத்து அழைப்பிதழை படித்தது. வரும் புதன்கிழமை அன்று செம்போத்து குருவியின் காதணி விழா! அனைவரும் வருக! ம்ம் , வெகு நாட்களுக்கு பிறகு ஒரு விழாவிற்கு செல்கிறோம்! என்று மகிழ்ச்சி   அடைந்தது குழி நரி பூச்சி . என்ன ஆடை அணிந்து கொள்ளலாம்? என யோசிக்க ஆரம்பித்தது. யாருமே அணியாத நிறத்தில் என்னுடைய ஆடை இருக்க வேண்டும்! என எண்ணியது. எதற்கும் தட்டாம்பூச்சியை கேப்போம்! அது தான் மிக விரைவாக பறக்கிறதே ! அனைவரின் ஆடைகளின் நிறங்களையும் அது கூறி விடும்! என்று எண்ணி வெளியே வந்து பாடியது   குழிநரி பூச்சி. தட்டானே ! தட்டாம்பூச்சி! தட்டானே ! தட்டாம்பூச்சி! மேல் நோக்க...

அசுணமாவிற்கு தூது சென்ற யாழிசை !

  அசுணமாவிற்கு தூது சென்ற யாழிசை !   வானத்தில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தது . ஆனால் அதனுடைய வெளிச்சம் மரங்கள் சூழ்ந்த காட்டினுள் வரவில்லை.ஈர வாசம் மண்ணில்   இருந்து எழுந்து கொண்டிருந்தது. அப்போது பசுமையான   இருட்டில் இருந்து இரண்டு பிறை நிலாக்கள் கண்ணுக்கு தெரிந்தன. பார்க்கும் போதே பிறை நிலாக்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. அதோ வந்து விட்டது! பிறை கவ்வி நடக்கும் மலை! என்று கூறியது ஒரு வண்டு. நிலத்தை தோண்டிக்  கொண்டிருந்தது  கரடி ஒன்று.   என்னது நடக்கும் மலையா ? என ஆச்சர்யப்பட்டது . கரடி நடக்கும் மலையை பார்க்க திரும்பியது . அப்போது நிலத்திற்குள் இருந்த பாம்பு ஒன்று வேகமாக தப்பி சென்றது. மலையில்   பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீர்   மட்டுமே தெரிந்தது கரடிக்கு. வண்டுகள் வேகமாக நீர் தேக்கத்தை   சுற்றி ரீங்கரிக்க ஆரம்பித்தன. நடக்கும் மலையை கண்டு பயந்து புலி ஒன்று மெதுவாக புதரில் பதுங்கி அமைதியாக இருந்தது.   கரும் பச்சை இலைகளை கிழித்துக்கொண்டு மலை நகர்ந்து வந்து கொண்டே இருந்தது! சிறுகண் யானை ! என்று சலசலத்தன இலைக...

நவரை மீனுக்கு யார் சொல்வது?

                                                                நவரை மீனுக்கு யார் சொல்வது?   குளிர்காலத்தின் மாலை நேரம். வானில் நிலவு மூன்றாம்   பிறையை கொண்டிருந்தது . கடல் நீரின் அலை ஓசை தொலைவில் கேட்டு கொண்டிருந்தது. ஏரி   நீர் வெதுவெதுப்பாக இருந்து சில்லென்று மாற ஆரம்பித்தது. இரண்டு மீன்கள் உல்லாசமாக நீந்தியபடி பேசி கொண்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில்   வலசை பறவைகள் வந்து விடும் என்றது சுதும்பு   மீன். வலசை பறவைகளா ? என்று வியப்புடன் கேட்டது நவரை மீன். அப்போது அதன் உடல் முழுவதும் சிவப்பாக மாறியது. உனக்கு எதற்கெடுத்தாலும் வியப்பு தானா? என்று சலித்து கொண்டது சுதும்பு மீன். நான் வியப்படைவது உனக்கு எப்படி தெரிகிறது? அட குட்டி நவரை மீனே! நீ தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது! நீ வியப்படையும் போதெல்லாம் உன் உடல் சிவப்பு நிறமாக மாறி விடும். அப்படியா ? என அதற்கும் வியந்தது நவரை மீன்...

தூக்கணாங்குருவியின் துணிக்கடை !

  தூக்கணாங்குருவியின் துணிக்கடை !     நட்சத்திரங்கள் மட்டுமே இருட்டில் மின்னிக் கொண்டிருந்த அதிகாலை நேரம். இரண்டு தூக்கணாங்குருவிகள் பேசி கொண்டிருந்தன. நாம் ஏன் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே "காகடுலா" ஆற்றுக்கு செல்கிறோம்? திருவிழா என்பதன் அர்த்தம் அது தானே! தினந்தோறும்   ஒரு இடத்திற்கு சென்றால் அதனுடைய குதூகலம் இருக்குமா? அதனால் தான் நம் பறவைகளின் திருவிழாவிற்கு "காகடுலா" என்றே பெயர் வைத்துள்ளோம்! நீ சொல்வதும் சரி தான் ! திருவிழா என்பது வருடத்திற்கு ஒருமுறை வந்தால் தான் நன்றாக இருக்கும். சென்ற முறை நாம் அங்கிருந்த போது ,    "காகடுலா"   ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது ! நிறைய மீன்கள் துள்ளி விளையாடியது.! ஆற்றின் கரைகளில் நிறைய மரங்களும், புதர்களும் இருந்தன. நாம் அந்த மரங்களின் உச்சியில் அமர்ந்து   "காகடுலா"   ஆற்றை பார்த்து கொண்டிருந்தோம். ஆம்! நன்றாக நினைவிருக்கிறது. சூரியன் உதயமாக போகிறது. நாம் இரை   தேட செல்ல வேண்டும் என பறந்து சென்றன.. மாலையில் , கூட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தன. இன்னுமும் இரண்டு மாதத்தில...