குக்குடம் எதை தான் தேடுகிறது ! வானம் இருண்டிருந்தது. மழை பெய்ய போவதற்கான வாசம் வீசியது. வேப்பிலை ஒன்றை கொடை பிடித்து சென்றது எறும்பு. சட் சட் என மழைத்துளிகள் விழுந்தன. வேகமாக ஓடி பெரிய புல் ஒன்றின் அடியில் நின்றது எறும்பு. தவளைகளின் கொரக்.. கொரக் என்ற சத்தம் கேட்டது. மழை பெய்தால் தவளைகளுக்கு தான் கொண்டாட்டம்! என்று சலித்து கொண்டது எறும்பு. குவிக் குவிக் என்ற பாடல் மகிழ்ச்சியாக ஒலித்தது! எனக்கும் கூட தான்! என்று வந்து அமர்ந்தது மழைக்காடை. ஹ்ம்ம் ! குவிக் குவிக் என்ற சத்தம் வந்ததும் தெரிந்து கொண்டேன்! என்றது எறும்பு. மழை எப்போது நிற்பது? நான் எப்போது உணவை சேமிப்பது? என புலம்பியது எறும்பு. நீ தான் ஏற்கனவே உணவை சேமித்து வைத்திருப்பாயே! என்றது மழைக்காடை. அந்தக் கதை தெரியாதா ? உனக்கு ? என சலித்துக் கொண்டது எறும்பு. விருப்பமிருந்தால் கூறு! என்று றெக்கையை உலுக்கி கொண்டது மழைக்காடை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உணவை சேர்த்து வைத்திருந்தேன்! குவிக்! என்றது மழைக்காடை! நேற்று ஒரு கோழி வந்...
செம்போத்து குருவியின் காதணி விழா ! மிக அமைதியாக இருந்தது பகல் பொழுது. சூரியனின் வெப்பம் மிதமாக இருந்தது. இரை தேடும் பறவைகள் அனைத்தும் எங்கேயோ பறந்து சென்று விட்டன. மெதுவாக குழியை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தது குழிநரி பூச்சி. வெளியே ஒரு அழைப்பிதழ் இருந்தது. நமக்கு யார் அழைப்பிதழ் வைத்திருப்பார்கள்? என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டே குழிக்குள் சென்றது. விளக்கை ஏற்றி வைத்து அழைப்பிதழை படித்தது. வரும் புதன்கிழமை அன்று செம்போத்து குருவியின் காதணி விழா! அனைவரும் வருக! ம்ம் , வெகு நாட்களுக்கு பிறகு ஒரு விழாவிற்கு செல்கிறோம்! என்று மகிழ்ச்சி அடைந்தது குழி நரி பூச்சி . என்ன ஆடை அணிந்து கொள்ளலாம்? என யோசிக்க ஆரம்பித்தது. யாருமே அணியாத நிறத்தில் என்னுடைய ஆடை இருக்க வேண்டும்! என எண்ணியது. எதற்கும் தட்டாம்பூச்சியை கேப்போம்! அது தான் மிக விரைவாக பறக்கிறதே ! அனைவரின் ஆடைகளின் நிறங்களையும் அது கூறி விடும்! என்று எண்ணி வெளியே வந்து பாடியது குழிநரி பூச்சி. தட்டானே ! தட்டாம்பூச்சி! தட்டானே ! தட்டாம்பூச்சி! மேல் நோக்க...