அன்னபூர்ணியின் பொழுதுகள் - 6 சில வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் அன்னபூர்ணி மகிழ்ச்சி அடைகிறாள். விக் ... னேஷ் ... வர்.... என ராகம் போட்டு அழைக்கும் போது சிரித்தாள். இங்க பாருங்க உங்க பேர் கேட்டதும் சிரிக்கறா! என கூறினேன். நான் அழைத்ததை போன்ற ராகத்தில் "ஒரு கிலோ கத்திரிக்காய்!" என பேசினார். அதற்கும் சிரித்தாள் அன்னபூர்ணி. மனோ , அவ உன்னோட குரல் ஏற்ற இறக்கத்தில வர ராகத்துக்கு தான் மகிழ்ச்சி அடைகிறாள். பேருக்கு இல்லை. பேர் எல்லாம் தெரிந்து கொள்ள இன்னும் இரண்டு மாத காலம் ஆகும் என்றார் விக்னேஷ்வர். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026
அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5 விளையாடிக் கொண்டிருக்கும் போது அன்னபூர்ணியின் பாதங்களை எடுத்து என் கண்ணுக்கு மேல் வைத்தேன். அவளுடைய பாதத்தின் குளிர்ச்சி என் கண்களின் வெம்மையை தணித்தது . விக்னேஷ்வரிடமும் அப்படி செய்து பார்க்கும் படி கூறினேன். அதே போல் செய்த பிறகு , கண்களை மூடிக் கொண்டே உணர்ச்சி ததும்ப , ஒரு வேளை சிவனின் பாதங்கள் கண்ணப்பநயினாருக்கு இப்படி தான் குளிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றார் விக்னேஷ்வர் . Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026