இன்று பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துக் கொண்டே நடந்தேன். அதில் சீராக சிந்தனை செய் , விரைவாக செயல்படு என்ற வாசகம் சிறு வெளிச்சம் போல அறுபட்ட எண்ணங்களை இல்லாமலாக்கியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? நடந்து கொண்டிருக்கிறேன். பூங்காவில் இருக்கும் நபர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் பலவகையான எண்ணங்களை தொடர்பில்லாமல் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் நான் எங்கே இருக்கிறேன்? இதுவரைக்கும் எண்ணங்கள் தான் சிந்தனைகள் என்று நினைத்திருந்தேன். ஒரு எண்ணத்தில் இருந்து இன்னொரு எண்ணத்திற்கு மனம் தாவிச் செல்கிறது. இதை நான் ஏதோ ஒரு அதிமேதாவித்தனம் என்று தான் நம்பியிருக்கிறேன். ஆனால் இந்த வாசகம் அதை ஒரு குப்பை கூடம் என கூறிவிட்டது. Sakamoto என்ற ஒரு ஜப்பானிய கார்ட்டூன் சீரிஸ் ஒன்றை விக்னேஷ்வர் பார்த்து வருகிறார். வன்முறை சார்ந்தது தான். ஆனால் அதில் சில நல்ல எபிசோடுகள் வரும் போது என்னை பார்க்க சொல்வார். அதில் வரும் நாயக...