அதிகாலை நான்கு மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. ரமாமணியும் , லக்ஷ்மி அம்மாவும் ஹீட்டர் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர். நான் பச்சை தண்ணீரையே எடுத்து குளித்துவிட்டு வெளியே வந்தேன். குளிரான பிரதேசங்களில் , பச்சை தண்ணீரில் குளித்துவிட்டு வெளியே வருவது குளிரை குறைக்கும் என்பது கடந்த இரண்டு வருடங்களில் நானாக கண்டு கொண்ட உண்மை. மலைப்பகுதியில் சீக்கிரம் வெளிச்சம் வந்துவிடுகிறது. ஒவ்வொருவராக நித்யவனத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. வருபவர்களின் முகத்தில் மலர்ச்சியும் , கொஞ்சம் பதட்டமும் , கேள்வி பாவனையும் , நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது வரும் சிரிப்பும் , பயணத்தினால் வந்த களைப்பும் என பலவித முகபாவங்கள். காலை உணவு முடிந்ததும் புத்தருக்கும் , சரஸ்வதிக்கும் ஆசிரியர் மாலை அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் குரு நித்யா கூடத்திற்கு வந்தோம். ஜெயக்குமார் சார் பாடல் பாடி துவக்கினார். மணி அண்ணா மேடையில் தோன்றி , ஆசிரியர் வகுப்பு எடுத்து முடிக்கும் வரை யாரும் எதுவும் கேள்வி கேட்காதீர்கள். உங்களுடைய கேள்விகளை எழுதி வைத்துக் கொண்டு வகுப்